கிழக்கு மாகாணம் தழுவிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஒன்றினை காத்தான்குடி மீடியா போரம் நடாத்திவருகின்றது.
இந்நிகழ்வின் 1ம் கட்டமாக இன்று பிற்பகல் அஷர் தொழகையை தொடர்ந்து 1990யில் விடுதலைப்புலிகளால் 103 பேர் சுஜூதில் ஷஹீதாக்கப்பட்ட மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியா பள்ளி வாசலை பார்வையிட்டனர்.
அதன் அடுத்த கட்ட நிகழ்வாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் தலைமையில் ஹிஸ்புல்ல அரங்கில் கருத்தரங்கு நிகழ்வும் இடம்பெற்றதாக அங்கிருந்து இம்போட் மிரர் செய்தியாளர் பைஷல் எம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்நிகழ்வு ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதுடன், ஊடகவியலாளர்கள் மத்தியில் காணப்படும் கலை, கலாசார,பண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன. என்று மேலும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் இம்போட் மிரர் செய்தியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் இம்போட் மிரர் செய்தியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment