தற்பொழுது காத்தான்குடியில் இடம்பெறும் கிழக்குமாகாண ஊடகவியலாளர் சந்திப்பு- படங்கள்

அலுவலக செய்தியாளர்-

கிழக்கு மாகாணம் தழுவிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஒன்றினை காத்தான்குடி மீடியா போரம் நடாத்திவருகின்றது. 

இந்நிகழ்வின் 1ம் கட்டமாக இன்று பிற்பகல் அஷர் தொழகையை தொடர்ந்து 1990யில் விடுதலைப்புலிகளால் 103 பேர் சுஜூதில்  ஷஹீதாக்கப்பட்ட மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியா பள்ளி வாசலை பார்வையிட்டனர்.

அதன் அடுத்த கட்ட நிகழ்வாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் தலைமையில் ஹிஸ்புல்ல அரங்கில் கருத்தரங்கு நிகழ்வும் இடம்பெற்றதாக அங்கிருந்து இம்போட் மிரர் செய்தியாளர் பைஷல் எம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்நிகழ்வு ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதுடன், ஊடகவியலாளர்கள் மத்தியில் காணப்படும் கலை, கலாசார,பண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன. என்று மேலும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இம்போட் மிரர் செய்தியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :