சட்டத்துறை வாழ்வில் பொன்விழா காணும் சமூக சேவையாளர் க.மு. தர்மராஜாவுக்கு கௌரவிப்பு நிகழ்வும் மலர் வெளியீடும் எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரா தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி கனக். ஈஸ்வரன் மற்றும் கௌரவ அதிதியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர்) ஆகியோர் கலந்து கொள்வதுடன் வாழ்த்துரைகளை பேராசிரியர் சோ. சந்திரசேகரம், ஆ. இரகுபதி பாலசிறிதரன் (தலைவர் கொழும்பு தமிழ்ச் சங்கம்) வீ. தனபாலசிங்கம் (பிரதம ஆசிரியர் தினக்குரல்) ஆகியோர் வழங்குவதுடன் சிறப்புரையை 'சூரசங்காரம் = தர்மம் வெல்லும்' எனும் தலைப்பில் தமிழ் மாமணி தமிழருவி த. சிவகுமாரன் நிகழ்த்துவார். நன்றியுரையை ஊடகவியலாளர் அ. நிக்சன் நிகழ்த்துவார். இந்த விழாவை தர்மராஜாவின் ஊடக நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment