யானைகள் சண்டையிட்டதில் ஒரு யானை பலி

கெக்­கி­ராவை கண்­டக்­குளம் இறம்­பைக்­கும்­புற பகு­தியில் இரண்டு கொம்பன் யானைகள் சுமார் 5 மணித்­தி­யா­லங்கள் ஒன்றை ஒன்று மூர்­க்கத்­த­ன­மாகத் தாக்கிக் கொண்­டதில் ஒரு யானை உயி­ரி­ழந்­துள்­ளது.

கடந்த சில ­கா­ல­மாக இப்­ப­கு­தியில் சுமார் 25 யானை­களைக் கொண்ட கூட்­ட­மொன்று பிர­தே­சத்தில் உலாவி வந்­த­தா­கவும் அவற்றில் ஒரு கொம்பன் யானை மிகவும் சண்டித் தனம் காட்டி வந்­துள்­ளது. பிர­தேச மக்கள் அதனை ‘சண்­டியா’ என்ற பெயர் கொண்டு அழைத்­துள்­ளனர்.

மேற்­படி சண்­டி­யா­விற்கும் அதே கூட்­டத்­தி­லி­ருந்த இன்­னொரு கொம்பன் யானைக்­கு­மி­டையே மோதல் ஏற்­பட்டு அவை ஒன்­றை­யொன்று தாக்கிக் கொண்­டுள்­ளன. இந்த மோதல் உக்­கி­ர­ம­டைந்து இரவு  வரை சுமார் 5 மணித்­தி­யாலங்கள் மோதி­யுள்­ள­தாகப் பிர­தேச மக்கள் தெரி­வித்­தனர்.

இறு­தியில் அதில் ஒரு யானை நீரோ­டையில் வீழ்ந்­துள்­ளது. அவ்­வி­டத்­திற்குச் சென்ற சண்­டியா என்ற கொம்பன் யானை தனது கொம்­பினால் கீழே வீழ்ந்த யானையைத் தாக்கிக் காயப் படுத்­தி­யதில் அது இரத்தம் பீறிட்ட நிலையில் மர­ணித்­துள்­ளது. அதன் உயிர் பிரியும் வரை சற்று நேரம் சண்டியா என்ற கொம்பன் அங்கு தரித்து நின்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.<மெட்றோநியுஸ்>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :