பெரும்பான்மையின மக்களுக்காக மட்டுமே கல்வி அமைச்சராக பந்துல குணவர்த்தன!

பெரும்­பான்மை இன மக்­க­ளுக்­காக மட்­டுமே கல்வி அமைச்­ச­ராகப் பதவி வகிக்­கின்றார் பந்­துல குண­வர்த்­தன. எத்­த­னையோ தட­வைகள் தமிழ்ப்பாட­சா­லை­க­ளுக்கு ஆய்வுகூடங்­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கு­மாறு கோரிக்கை விடுத்தும் இது­வ­ரையில் கல்வி அமைச்சர் தமிழ்ப் பாட­சா­லை­களை கண்டு

கொள்­ளா­மலே உள்­ளா­ரென்று பிர­தி­ய­மைச்சர் பிர­பா­க­ணேசன் சபையில் நேற்று குற்றம் சாட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செலவு திட்ட விவா­தத்­திலே உரை­யாற்றும் போதே தொலைத்­தொ­டர்­புகள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

கொழும்பில் சிங்­கள பாட­சா­லைகள் அனைத்­திற்கும் ஆய்வு கூட வச­தி­களை கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளார்.

ஆனால், கொழும்­பி­லுள்ள தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு ஆய்வு கூடங்­களை அமைத்துக் கொடுக்­கு­மாறு எத்­த­னையோ தட­வைகள் கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­த­னவை சந்­தித்து வேண்­டு­கோளை முன்­வைத்தோம்.

ஆனால், இன்­று­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. கல்வி அமைச்சர் பெரும்­பான்மை இன மக்­க­ளுக்­காக மட்­டுமே கல்வி அமைச்­ச­ராக பதவி வகிக்­கின்றார்.

தமிழ் மக்­களை ஓரம் கட்­டு­கிறார். இதனை ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்டு தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு ஆய்வு கூடங்­களை அமைத்துக் கொடுப்பேன்.

மலை­யகம்

மலை­யகம் அம்­மக்­களும் வரவு செல­வுத்­திட்­டத்தில் ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர். இது கவ­லை­ய­ளிக்­கி­றது. அங்கு 50,000 வீடு­களை அமைப்­ப­தற்­கான நிதியை பெருந்­தோட்ட அபி­வி­ருத்தி நிதிக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் ஒரு போதும் வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­படப் போவ­தில்லை.

எனவே, அரசு நேர­டி­யாக தலை­யிட்டு வீடு­களை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

கொழும்பு

கொழும்பில் ??????வீடு­களில் வாழ்ந்த மக்­க­ளுக்கு இன்று அனைத்து வச­தி­க­ளு­ட­னான தொடர் மாடித் திட்­டங்கள் அமைத்துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ் வீடு­களில் பெரும்­பான்­மை­யான வீடுகள் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது.

கூட்­ட­மைப்பு

அரசு முன்­னெ­டுக்கும் அபி­வி­ருத்­தி­க­ளுடன் இணைந்து வடக்­கிற்­கான அபி­வி­ருத்­தி­க­ளுக்கு கூட்­ட­மைப்பு பங்­க­ளிப்பு செய்ய வேண்டும்.

அதி­காரப் பர­வ­லாக்கல் முழு­மை­யாக கிடைக்­க­வில்லை. உண்மை தான். அதனால் ஒதுங்கிக் கொண்­டி­ருக்­காமல் அரசின் அபிவிருத்தியுடன் இணைவதன் மூலமே அதிகாரப் பரவலாக்கலை பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் தேசியத்தை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் எதுவுமே நடைபெறுவதில்லையென்றும் பிரதியமைச்சர் பிரபாகணேசன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :