18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் தலா நான்காண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதா தவிர்த்த பிறருக்கு தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருந்ததால், இவர்களது மனுக்கள் கடந்த வாரம் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அவர் இதனை வழக்கமாக விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தசரா விடுமுறை முடிந்து நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்ததும் செவ்வாய்க்கிழமையன்று, 73வது வழக்காக நீதிபதி சந்திரசேகர ராவ் முன்பாக விசாரணைக்குவந்த்து.
அரசுத் தரப்பின் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடிய பவானி சிங்கே மீண்டும் ஆஜரானார்.
ஜெயலலிதா சார்பாக ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ஜெத்மலானி, “ஜெயலலிதா சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர். நீதிமன்றம் அழைக்கும்போது அவர் ஆஜராகத் தவறியதில்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை நடந்து முடிய பெரும் கால தாமதம் ஏற்படும். ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென” வாதிட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் ஜெத்மலானி வாதிட்டார். அதற்குப் பிறகு சசிகலா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதிட்டார். ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வாதிட்டார்.
மதியம் வந்ததும் வழக்கு மீண்டும் இரண்டரை மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.BBC

0 comments :
Post a Comment