முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அரசியல் வாதிகள் அனைவரும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னடுத்து வருகிறார்கள்
01.வைத்தியசாலை HOSPITAL
02.பாடசாலை SCHOOL
ஆனால் முஸ்லீம்கள் சிறிதளவு வாழும் பகுதியில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் எவ்விதமான அடிப்படை தேவைகளும் கொடுக்கப்படுவதில் பெரும் பான்மை சமுக அங்கத்தவர்கள் பாரபச்சம் காட்டுகின்றார்கள்.
அப்படியான பாடசாலைகளில் ஒன்றுதான் தல்துவ முஸ்லிம் மகா வித்தியாலயம். இது சபரகமுவ மாகாணத்தில் அவிஸ்ஸாவெலை பகுதியில் தல்லுவ எனுமிடத்தில் ஊருக்கே என்றிருக்கும் ஒர் பாடசாலையாகும்.
இந்த ஊருக்கும் நூல் நிலையம் ( LIBRARY) கிடையாது, பாடசாலைக்கும் கிடையாது.
கடும் சிரமத்திற்கு மத்தியில் முஸ்லிம் தனவந்தர்களின் உதவியால் தற்போது கட்டிடம் ஆரம்பித்து இடை நடுவில் நிற்கிறது.
மேலும் 500க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலையில் மேசை,கதிரை,கட்டிடம் பற்றாக்குறையும் காணப்படுகிரது.
ஆனால் கல்வி நடவெடிக்கையில் இப் பாடசாலை சித்திரப் பாடத்தில் பழ்கலைக்கழகம் அதி கூடிய மாணவர்கள் சென்றுள்ளார்கள்
மேலம் தரம் O/L பரீட்சையில் 9A சித்திகளும், புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி பாடசாலைகளில் முதலிடத்திலும் உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையிலும் முஸ்லீம்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவிலும் இவ்வாறான பாடசாலைகள் உதவியின்றி கல்வியில் பின்னடைவு ஏற்படுமாயின் முஸ்லிம் கல்வியில் அக்கரை காட்டும் அனைத்து உள்ளங்களும் இறைவனிடத்தில் பறைசாட்டப்படுவீர்கள் என்கின்ற உண்மையை உரக்கச் சொல்கிறோம்.
அன்புள்ளம் கொண்ட முஸ்லீம் அரசியல் வாதிகளே, பொது நிறுவணங்களே உங்களது சேவைகளை என்றும் எதிர் பார்த்து நிற்கிறது எமது பாடசாலை.
தொடர்புகளுக்காக: 0363862776
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment