பொத்துவில் பிறைந்துரைக்கண்டம் வன்னியனார் வாய்க்கால் புதிய விவசாயக்குழு நிருவாகத் தெரிவின் போது குழப்பம் விளைவித்து அரச கடமைக்கு பங்கம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எமது இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட குழப்பத்தால் கிராம உத்தியோகத்தர் அலீப்கான், அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் றஹீம் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,
அரச கடமைக்கு குந்தகம் விளைவித்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.பதுர்கான், சமுர்தி உத்தியோகத்தர் பஸ்மீர், பக்குர்தீன், மற்றும் கிராம உத்தியோகத்தர் றாபி,ஹபீல்ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
இது சம்மந்தமாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment