அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளபதியை சுட்டுக்கொன்ற ஆப்கன் ராணுவ வீரர்

ப்கன் தலைநகர் காபூலில் உள்ள பிரிட்டன் நாட்டு ராணுவச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆப்கன் ராணுவத்தினருக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அவரை கொன்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெர்மன் நாட்டு தளபதி ஒருவர் உள்பட 15 படையினரும் அந்த வீரரின் தாக்குதலால் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இரு-நட்சத்திரங்களை அணிந்துள்ள அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. 13 வருட போரில் தற்போது தான் அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கன் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாஹிர் அசாமி இத்தாக்குதல் குறித்து கூறுகையில்,

ஆப்கன் ராணுவ வீர்ர் போல் உடையணிந்து வந்த நபர் தான் அதிகாரியை கொன்றதாக கூறியுள்ளார். அமெரிக்க தரப்பில் கூறுகையில், 12க்கும் மேற்பட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கூறியுள்ளது. தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய எதிரியும் கொல்லப்பட்டதாக கூறியுள்ள அமெரிக்கா, அவரை சுட்டுக்கொன்றது அமெரிக்காவா அல்லது ஆப்கன் ராணுவத்தினரா என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளது.
ஜ.மு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :