இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் போங்கீர் மாநகராட்சிக்கு விஜயம்.




ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்-

ந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த மாநகர சபைகளின் முதல்வர் உறுப்பினர்களின்  மூன்றாம் நாள் பயிற்சி நெறியில் இன்று (2014.08.06) தெலுங்கான மாநிலத்தின் மாநகர சபைகளில் ஒன்றான போகூர் மாநகராட்சிக்கு எமது குழுவினர் விஜயம் மேற்கொண்டனர்.

போங்கீர் மாநகராட்சி மேயர் உறுப்பினர்கள் ஆணையாளர்களுடன் இணைந்து திண்மக்கழிவு தொடர்பாக குறித்த மாநகராட்சி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை களத்திச் சென்று பார்வையிட்டோம்.

மேயர் லாவன்யா தலைமையில் இலங்கையில் காணப்படும் மாநகர சபைகளுக்கும் இந்தியாவில் காணப்படும் மாநகராட்சிக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.

மேலும் அன்றாடம் வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதில் ஏற்படும் விரையத்தினை தவிர்ப்பதற்காக தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பு மற்றும் வரி அறவீடல் முறைமையில் கையாளப்படும் நவீன தொழில்நுட்பம் என்பவற்றை நேரில் பார்வையிட்டதோடு அவை தொடர்பான விளக்கங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

போங்கீர் மாநகராட்சி முதல்வர் லாவன்யாவினால் விஜயம் செய்த இலங்கை குழுவினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :