கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக அப்துல் மஜீத்

ல்முனை மாநகர சபையின் உறுப்பினராக ஏ.எல்.அப்துல் மஜீத் (முழக்கம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாவார்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் உறுப்பினர் வெற்றிடத்திற்கே ஏ.எல்.அப்துல் மஜீத் உறுப்பினராக தெரிவு செயயப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்த மஜீத் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தபோதிலும் கடைசி நேரத்தில் ஏ.எம்.ஜெமீலுக்காக விட்டுக்கொடுத்தவர்.

அம்பாரை மாவட்டத்தின் கட்சிப்போராளிகள் முழக்கம் மஜீதுக்காக வாக்களிப்பதற்கு மிக ஆர்வமாக இருந்தனர். இறுதியில் சில சதிகாரா்களின் சூழ்ச்சியினால் கட்சித் தலைவரின் வேண்டுகோளின்படி ஜெமிலுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியேற்பட்டது. அதன் காரணமாக மாகாண சபை உறுப்பினராகும் வாய்ப்பும் இல்லாமல் போனது.

இவ்வாறான நிலையில் அப்துல் மஜீதுக்கு மாநகர சபை உறுப்பினர் பதவியும், பிரதி முதல்வர் பதவியும் வழங்க கட்சி எடுத்த தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை மாநகர சபையின் உறுப்பினராக அடுத்த இடத்தில் இருக்கும் முன்னாள் உறுப்பினர் தெளபீக் அவர்களுக்கும் கட்சி நன்றி கூறுவதுடன் மஜீதுக்கு பிரதி முதல்வர் பதவி வழங்க தனது பிரதி முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ள பிரதெளஷ் ஆகியோருக்கும் சபையின் கட்சி உருப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் செயலாளர் ஹஸன் அலி இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :