மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புக்கு வந்த பெண் பொலிசை ஷாருக்கான் தூக்கியதால் பரபரப்பு

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

விழா மேடையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றபோது, சில இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடிய ஷாருக் கான், மேடை ஓரமாக ஓடி வந்து, அங்கு பந்தோபஸ்த்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் போலீஸை அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் போலீஸ் சீருடையை அவமதிக்கும் விதமாக உள்ளது. அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்து போலீஸ் சீருடையின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு பொது நிகழ்ச்சி இந்த பிரச்சனையை பெரிது படுத்தக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.<மா.ம>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :