காதலால் கத்திக்குத்துக்காளான உயர்தர மாணவன்-அம்­ப­லாங்­கொடையில் சம்பவம்



ல்­விப்­பொதுத் தரா­தர உயர் தரப்­ப­ரீட்­சைக்கு தோற்­றி­யுள்ள மாணவன் ஒருவன் மீது நேற்று முன் தினம் பிற்­பகல் வேளையில் கத்­திக்­குத்து தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அம்­ப­லாங்­கொடை தேவா­னந்த வித்­தி­யா­ல­யத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள பரீட்சை மத்­திய நிலை­யத்தில் பரீட்சை எழு­தி­விட்டு வெளி­யேறி வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த தல்­கஸ்­கொட பிர­தே­சத்தை சேர்ந்த 19 வய­து­டைய மாணவன் ஒரு­வனே இவ்­வாறு கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி உள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

பரீட்சை எழு­தி­விட்டு வீடு செல்­வ­தற்­காக பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு சென்ற போது அதன் அருகில் உள்ள வீதியில் வைத்தே இந்த கத்­திக்­குத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
சம்­ப­வத்தை அடுத்து உட­ன­டி­யாக குறித்த மாணவன் பலப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளான்.

மாண­வனின் இத­யத்­துக்கு அண்­மை­யி­லேயே கத்­திக்­குத்து காயங்கள் இருப்­ப­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. அத்­துடன் நேற்­றைய தினம் மாண­வ­னுக்கு விசேட சத்­திர சிகிச்சை ஒன்று மேற்­கொள்­ளப்­பட்டு கத்தி அகற்­றப்­பட்­ட­தா­கவும் அந்த தக­வல்கள் குறிப்­பிட்­டன.

குறித்த மாண­வ­னுக்கு கத்­தியால் குத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் இளைஞர் ஒரு­வரை அம்­ப­லாங்­கொடை பொலிஸார் கைது செய்­துள்­ள­துடன் பிர­தான சந்தேக நபரை தேடி வரு­கின்­றனர்.

சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நப­ரிடம் பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் காதல் விவ­கா­ரமே கத்­திக்­குத்­துக்கு காரணம் என தெரி­ய­வந்­துள்­ளது. குறித்த மாண­வனும் கத்­திக்­குத்தை மேற்­கொண்ட தரப்பை சேர்ந்த இளைஞர் ஒரு­வரும் ஒரே யுவ­தியை காத­லித்­துள்­ள­தா­கவும் இதன் பிரதிபலனே கத்திக்குத்து சம்பவம் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரி­வித்­தார்.   -வீ-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :