விரைவில் நடைபெறவிருப்பதாக கூறப்படும் ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கே மீண்டும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் சொல்லக்கூடிய சூழலை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சித்த வைத்திய கூட்டுறவு மகளிர் விவகார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் கூறினார்.
அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மிக மோசமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்களை இல்லாதொழித்தல், சேதப்படுத்தல், பாரம்பரியமான முஸ்லிம் குடியிருப்புக்களை சேதப்படுத்தல், அழித்தல் உயிர்களை பலி கொள்ளல் போன்ற இன்னோரன்ன அட்டூழியங்களையும் அடாவடித்தனங்களையும் அவ்வப்போது தடுப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ அரசு சார்ந்தவர்கள் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
சிறியளவிலான சட்ட நடவடிக்கைகள் எடுக்க கூட முயற்சிக்கவில்லை. அது மட்டுமன்றி அரசாங்க அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் குறிப்பாக ஜனாதிபதி உட்பட இவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் முஸ்லிம்களின் மனதை காயப்படுத்துவதாகவே உள்ளன. இத்தகையதொரு சூழலில் முஸ்லிம் மக்களை மூன்றாம் முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள அதே ஜனாதிபதிக்கு வாக்களியுங்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுவது சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழும்புகிறது.
வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் மாத்திரமல்ல ஏனைய சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பௌத்த மக்களினதும் வாக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தன்வசம் ஈர்க்க வேண்டும் என எண்ணினால் அவர் மிக அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் பல உள்ளன.
மீண்டும் இலங்கையை யுத்த சூழலுக்கு கொண்டு வர துடிக்கும் இனவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வரை நடந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்ற வன்முறை சம்பவங்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் மாத்திரமல்ல ஏனைய சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பௌத்த மக்களினதும் வாக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தன்வசம் ஈர்க்க வேண்டும் என எண்ணினால் அவர் மிக அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் பல உள்ளன.
மீண்டும் இலங்கையை யுத்த சூழலுக்கு கொண்டு வர துடிக்கும் இனவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வரை நடந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்ற வன்முறை சம்பவங்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விடயத்தில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது. இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள தவறின் மறுபுறம் இந்த கெடுபிடியான சூழல் தொடர்ந்தும் இருக்குமாயின் எமது முஸ்லிம் காங்கிரஸ் தான் தீர்மானித்தலும் கூட தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களியுங்கள் என முஸ்லிம் மக்களை சந்தைப்படுத்துவது என்பது சாத்தியமற்றதாகவே போகும்.
இருந்த போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனாதிபதி ஆகுவதே எமது ஒட்டு மொத்த விருப்பமாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துணர்வு அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் உறவுகளை பேணி வந்துள்ளது. அதன் அடிப்படையில் எமது தலைவர் ரவூப்ஹக்கீம் மற்றும் தவிசாளர் உட்பட்டவர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்று வகித்து வருகிறார்கள். இது போலவே கிழக்கு மாகாண சபையில் ஆளும் அரசுக்கு ஆதரவு நல்கி அமைச்சர் பதவிகளை வகித்து வருகின்றோம். கிழக்கு மாகாண ஆட்சி அமைப்புக்கு சில நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு நல்கியிருந்தோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துணர்வு அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் உறவுகளை பேணி வந்துள்ளது. அதன் அடிப்படையில் எமது தலைவர் ரவூப்ஹக்கீம் மற்றும் தவிசாளர் உட்பட்டவர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்று வகித்து வருகிறார்கள். இது போலவே கிழக்கு மாகாண சபையில் ஆளும் அரசுக்கு ஆதரவு நல்கி அமைச்சர் பதவிகளை வகித்து வருகின்றோம். கிழக்கு மாகாண ஆட்சி அமைப்புக்கு சில நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு நல்கியிருந்தோம்.
முதலமைச்சர் பதவிக்குரிய காலம் வரும் போது அது தொடர்பான தீர்மானங்களை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும். இது போலவே ஊவா மாகாண சபை தேர்தலில் சில பொதுவான முடிவுகளின் படி ஒன்றிணைந்துள்ளோம். இதற்கு காரணம் மாகாணத்தில் சிதறி போய் கிடக்கும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பிரிந்து நின்று கேட்பதன் மூலம் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டதன் காரணமாகவே இரட்டை இலைச் சின்னத்தில் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
நாங்கள் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக கருதப்பட்டாலும் எல்லா விடயங்களிலும் உடன்பாடு காணப்படுகிறது என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக விளங்குகின்ற அம்பாறை மாவட்டத்தில் இப்பிரதேசங்களினுடைய பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவி அமைச்சர் அதாவுல்லாவுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆறு பிரதேசங்களுக்கு அபிவிருத்தி தலைவராக அவரே நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் எவ்விடத்திலும் காணப்படாத விசித்திரமாகும்.
இப்படி ஒருவருக்கே எல்லா பதவிகளும் வழங்கப்படுகின்ற காரணத்தால் மாதாந்தம் கூட்டப்பட வேண்டிய கூட்டங்கள் மிக குறைவாகவே நடைபெறுகின்றன. வருடக்கணக்கில் கூட்டப்படாததும் உண்டு.
நாங்கள் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக கருதப்பட்டாலும் எல்லா விடயங்களிலும் உடன்பாடு காணப்படுகிறது என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக விளங்குகின்ற அம்பாறை மாவட்டத்தில் இப்பிரதேசங்களினுடைய பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பதவி அமைச்சர் அதாவுல்லாவுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆறு பிரதேசங்களுக்கு அபிவிருத்தி தலைவராக அவரே நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் எவ்விடத்திலும் காணப்படாத விசித்திரமாகும்.
இப்படி ஒருவருக்கே எல்லா பதவிகளும் வழங்கப்படுகின்ற காரணத்தால் மாதாந்தம் கூட்டப்பட வேண்டிய கூட்டங்கள் மிக குறைவாகவே நடைபெறுகின்றன. வருடக்கணக்கில் கூட்டப்படாததும் உண்டு.
இதனால் அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசங்களான அக்கரைப்பற்று பொத்துவில், அட்டாளைச்சேனை, இறக்காமம், சம்மாந்துறை போன்ற பிரதேசங்களின் அபிவிருத்திகள் பின்தள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வு காண வேண்டும். அவ்வப்பிரதேசங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் அபிவிருத்தி குழுத்தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரையில் அது தனியொரு இனத்துக்கான கட்சியென அடையாளமிட்டு விட முடியாது. சிறுபான்மை மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்ற போது அவர்களுக்காக குரல் கொடுத்தே வந்துள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட வேளைகளில் எல்லாம் அவர்களுக்காக குரல் கொடுக்க காங்கிரஸ் பின்நின்றதில்லை. சிலவேளைகளில் எதிர்காலத்தில் பொது தேர்தலாக இருக்கலாம் அல்லது ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் மற்றும் மாகாண சபை தேர்தலாக இருக்கலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பட்டு போவதிலோ இணைவதிலோ சிலவேளைகளில் சங்கடம் இருக்கலாம். ஆனால் எதிர்கால சூழ்நிலையில் இணைந்தே செயற்பட வேண்டுமென்ற சூழல் உருவாகுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கேட்பது பற்றி பரிசீலிக்கும்.
ஜனாதிபதி உரையாற்றும் போதோ கலந்துரையாடும் போதோ அடிக்கடி ஒன்றை சொல்லி வருகின்றார் சட்டத்தை யாரும் கையில் எடுக்க தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று. ஆனால் அவர் குறிப்பிடும் அச்சட்டத்தை தம் கையில் எடுத்துக்கொண்டு குழப்பம் விளைவிக்கும் ஒரு குழு தொடர்ந்தும் தமது அடாவடித்தனங்களை நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் இருந்து வருகின்ற போதும் தாம் விரும்பும் விடயத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஒன்று இன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது. இது பல்வேறு சந்தேகங்களை மக்களிடத்தில் தோற்றுவித்து வருகிறது. ஜனாதிபதி தனது அதிகாரத்தை செலுத்தும் பொறிமுறைக்கு இடையில் பல தடங்கல் இருப்பதாக ஊகிக்க முடிகிறது. எனவே, இது ஒரு ஆரோக்கியமான சூழலாக காணப்படவில்லை என்றே கூற வேண்டும் என மன்சூர் தெரிவித்தார்.(வீ.கே)
முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரையில் அது தனியொரு இனத்துக்கான கட்சியென அடையாளமிட்டு விட முடியாது. சிறுபான்மை மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்ற போது அவர்களுக்காக குரல் கொடுத்தே வந்துள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட வேளைகளில் எல்லாம் அவர்களுக்காக குரல் கொடுக்க காங்கிரஸ் பின்நின்றதில்லை. சிலவேளைகளில் எதிர்காலத்தில் பொது தேர்தலாக இருக்கலாம் அல்லது ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் மற்றும் மாகாண சபை தேர்தலாக இருக்கலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பட்டு போவதிலோ இணைவதிலோ சிலவேளைகளில் சங்கடம் இருக்கலாம். ஆனால் எதிர்கால சூழ்நிலையில் இணைந்தே செயற்பட வேண்டுமென்ற சூழல் உருவாகுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கேட்பது பற்றி பரிசீலிக்கும்.
ஜனாதிபதி உரையாற்றும் போதோ கலந்துரையாடும் போதோ அடிக்கடி ஒன்றை சொல்லி வருகின்றார் சட்டத்தை யாரும் கையில் எடுக்க தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று. ஆனால் அவர் குறிப்பிடும் அச்சட்டத்தை தம் கையில் எடுத்துக்கொண்டு குழப்பம் விளைவிக்கும் ஒரு குழு தொடர்ந்தும் தமது அடாவடித்தனங்களை நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் இருந்து வருகின்ற போதும் தாம் விரும்பும் விடயத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஒன்று இன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது. இது பல்வேறு சந்தேகங்களை மக்களிடத்தில் தோற்றுவித்து வருகிறது. ஜனாதிபதி தனது அதிகாரத்தை செலுத்தும் பொறிமுறைக்கு இடையில் பல தடங்கல் இருப்பதாக ஊகிக்க முடிகிறது. எனவே, இது ஒரு ஆரோக்கியமான சூழலாக காணப்படவில்லை என்றே கூற வேண்டும் என மன்சூர் தெரிவித்தார்.(வீ.கே)

0 comments :
Post a Comment