இந்த தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தமிழ்க்கட்சிகளின் தலைமைகள் செயற்படவேண்டும்

வா மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித் துவத்தை அதிகரிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகளின் தலைமைகள் செயற்படவேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஊவா­மா­கா­ண­சபைத் தேர்­தலில் மலை­யகத் தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒன்­று­சேர்ந்து ஒரு­பொ­து­வேலைத் திட்­டத்தில் ஒட்­டு­மொத்த மலை­யக மக்­களின் எதிர் கால நன்­மை­க­ருதி ஒன்­று­பட்டு செயற் பட­வேண்டும் என­ த­மிழர் விடு­தைலக் கூட்­டணி எதிர் பார்க்­கின்­றது. 

தமிழர் விடு­தலைக் கூட்­டணி ஆரம்­பித்த போது தந்­தை­செல்வா, இலங்­கைத்­தொ­ழி­லாளர் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னையும் இணைத்துக் கொண்­ட­தோடு மட்­டு­மல்­லாது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் ஏற்றுக் கொண்டே செயற்­பட்டார் அதன் நோக்கம் மலை­யகத் தலை­மை­களை அர­வ­ணைத்துக் கொண்­டுதான் இலங்­கையில் வாழும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்­வினைப் பெற்றுத் தர­மு­டியும் என்ற அவரின் திட­மான நம்­பிக்­கையேயாகும்.

அவர்­வ­ழி­யில்தான் இன்று வரை தமிழர் விடு­தலைக் கூட்­டணி தொடர்ந்தும் செயற்­பட்டுக் கொண்­டு­வ­ரு­கின்­றது. அத­னால்தான் நடந்து முடிந்த மேல்­மா­கா­ண­சபைத் தேர்­த­லிலும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஒரு­கு­றிப்­பிட்ட கட்­சிக்கு ஆத­ரவு தெரி­வித்­து­வாக்­க­ளிக்­கு­மா­று­கேட்டுக் கொண்­டதை தவறு என நான் சுட்­டிக்­காட்டி 24.03.2014 அன்று ஊட­கங்கள் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்­டி­ருந்தேன். ஆனால் அவர்கள் அவ்­வாறு செய்­யாமல் வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட ஒரு­சில கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் ஒரு­கு­றிப்­பிட்ட கட்­சிக்கே ஆத­ரவு தெரி­வித்து மேடை­களில் உரை­யாற்­றினர்.

அதன் விளைவால் ஏற்­க­ன­வேமேல் மாகா­ண­ச­பையில் இருந்­த­ தமிழ் பிர­தி­நி­தித்­துவம் குறைந்­த­தோடு மட்­டு­மல்­லாமல், வடக்கு, கிழக்­கிற்கு வெளியில் ஏனைய அர­சியல் கட்­சி­களைச் சார்ந்­த ­தமிழ் உணர்­வோ­டு­செ­யற்­பட்டுக் கொண்­டி­ருக்­கும்­ தமிழ் அர­சியல் பிர­மு­கர்கள், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரை­ மனக் கசப்­பு­ட­னேயே­ பார்க்­க­வேண்­டிய சூழ்­நி­லை­யையும் உரு­வாக்­கி­விட்­டது. இந்­த­ த­வ­றுக்­கு­ வ­ட­மா­கா­ண ­மு­த­ல­மைச்சர் எவ்­வா­று­ ஆ­த­ரவு­ தெரிவித்தார் என்­ப­து­எ­னக்­கு­ ஆச்­ச­ரி­யத்­தை­ தந்­த­து­ ஆனால் அவர் இதனை முழு மன­துடன் செய்­தி­ருக்­க­ மாட்டார் என்றே ­நி­னைக்­கின்றேன்.

ஆனால் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி ­எந்­த­ ஒ­ரு­ சந்­தர்ப்­பத்­திலும் மலை­ய­க­ அ­ர­சியல் தலை­மை­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னை­யை­ ஏற்­ப­டுத்­தா­து­ அ­வர்கள் அனை­வ­ரையும் ஒற்­றுமைப் படுத்­தி ­தந்­தை­செல்­வா­ காட்­டி­ய ­வ­ழியில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தை­ அ­தி­க­ரிக்­க­ செய்­வ­தற்­கா­க­வே­பா­டு­படும் என்­பதை இந்­த­சந்­தர்ப்­பத்தில் கூறி­வைக்­க ­வி­ரும்­பு­கின்றேன்.

தமிழ்த் தேசி­ய­கூட்­ட­மைப்பின் தலை­வர்­களில் ஒரு­சிலர், ஒரு­கு­றிப்­பிட்­ட­ கு­ழு­வி­னர்தான் தமிழ்த் தேசி­யத்­திற்­கா­க ­பா­டு­பட்­ட­து­ போ­லவும் ஏனைய தமிழ் அர­சியல் தலை­மைகள் எல்­லோரும் துரோ­கிகள் போலவும் சுட்­டிக்­காட்­டி­தங்­க­ளை­ உத்­த­மர்கள் போல ­காட்­டிக் கொள்­கின்­றார்கள். 

அத­னால் தான் இன்­று­வ­ரை­ தமிழ் மக்­க­ளின்­ பி­ரச்­சி­னைக்­கு­ ஒ­ரு­நி­ரந்­த­ர­ தீர்­வி­னை­பெற்றுக் கொள்­ள ­மு­டி­யா­துள்­ளது. தமிழ் அர­சியல் தலை­மை­க­ளை­ ஒன்­று­சேர்க்­க­ வேண்­டி­ய­பொ­றுப்­பி­ருந்தும் அவர்­க­ளி­டை­யே­ பி­ரி­வி­னை­யை­ ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

எதிர் காலத்தில் இவ்­வா­றா­ன­ த­வ­று­க­ளை­செய்­யா­து­பொ­றுப்­புடன் நடந்­து­கொள்­ள­வேண்­டு­மெ­ன­ அ­வர்­க­ளை­ கேட்­டுக்­கொள்­கின்றேன். மலை­ய­க­ அ­ர­சியல் தலை­மைகள் அனை­வ­ரையும் சந்­தித்­து­ ஒற்­று­மை­யை­ வ­லி­யு­றுத்­தி­ அ­தற்­கேற்­ற­வா­று­ அ­வர்கள் செயற்­ப­டு­வ­தற்­கான­ மு­யற்­சி­க­ளை­ மேற்­கொள்­ள ­தீர்மா­னித்­தி­ருந்தேன். காலம் போதா­மையால் அதற்­கா­ன ­மு­யற்­சி­க­ளை ­த­மிழர் விடு­தலைக் கூட்­டணி­ தேர்தல் முடிந்­த­ பின்னர் மேற்­கொள்ளும் எனவும் இந்­த ­சந்­தர்ப்­பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன். இந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலைமைவகிக்க தீர்மானித்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏற்னவே மலையக அரசியல்தலைமைகள், ஊவாமாகாண சபைத் தேர்தலில் சிந்தித்து ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமளவிற்குசெயற்படவேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொள்கின்றது.அத்துடன் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வாழ்த்துக்களையும தெரிவித்துக்கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :