கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சினால் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி



த.நவோஜ்-

கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சினால் மாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்ளை பிரதேச செயலகம் தோறும் நடாத்தி வருகின்றது.

இதனடிப்படையில் ஒட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் எட்டு பேருக்கு தலா முப்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டதுடன், பன்னிரெண்டு பேருக்கு சக்கர நாற்காலிகளும் நேற்று வழங்கப்பட்டன.

ஒட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருன்மொழி, பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.புஹாரி ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான காசோலையையும், சக்கர நாற்காலிகளையும் வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :