த.நவோஜ்-
கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சினால் மாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்ளை பிரதேச செயலகம் தோறும் நடாத்தி வருகின்றது.
இதனடிப்படையில் ஒட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் எட்டு பேருக்கு தலா முப்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டதுடன், பன்னிரெண்டு பேருக்கு சக்கர நாற்காலிகளும் நேற்று வழங்கப்பட்டன.
ஒட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருன்மொழி, பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.புஹாரி ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான காசோலையையும், சக்கர நாற்காலிகளையும் வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment