தமிழ் மக்­களை பழி­வாங்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது

நாட்டில் இரா­ணுவ ஆட்சி முறை ஒன்று ஏற்­ப­டு­வது ஜன­நா­ய­கத்­திற்கு பாரிய சவா­லாக அமையும். இன்று வடக்கில் இரா­ணுவ அடக்­கு­மு­றை­யினை ஏற்­ப­டுத்தி தமிழ் மக்­களை பழி­வாங்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். வட மாகாண ஆளு­நரின் மீள் நிய­மனம் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் எதிர்ப்பு நியா­ய­மா­னது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வட­மா­காண ஆளுநர் நிய­ம­ன­மா­னது தவ­றா­னது என அர­சாங்­கத்தில் இருக்கும் இடது சாரிக்­கட்­சிகள் தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாட்டில் இரா­ணுவ ஆட்­சி­யொன்று ஏற்­ப­டு­வ­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்சி எப்­போ­துமே எதிர்ப்பு தெரி­விக்கும். நாட்டின் இரா­ணுவ ஆதிக்கம் அதி­க­ரித்­தமை தொடர்பில் கடந்த காலங்­க­ளிலும் நாம் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளோம். இன்று வடக்கு மாகாணம் முழு­மை­யான இரா­ணுவ கட்­டுப்­பாட்­டுக்குள் சென்று விட்­டது. வடக்கு மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் பறிக்­கப்­பட்டு அவர்­களின் கோரிக்­கைகள் இரா­ணுவ சப்­பாத்­துக்­க­ளினால் மிதிக்­கப்­பட்டு விட்­டது. வடக்கு மட்­டு­மன்றி நாடு முழு­வ­திலும் இரா­ணுவ அதி­காரம் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு அர­சாங்கம் செயற்­ப­டு­வது எதிர்­கா­லத்தில் மேலும் பல பிரச்­சி­னை­களை அர­சாங்­கமே உரு­வாக்கும் வகையில் அமைந்து விடும்.

சர்­வ­தேச விசா­ரணை மூலம் இன்று இலங்கை தண்­டிக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இன்று வரையில் அர­சாங்கம் சர்­வ­தேச குற்­றச்­சாட்­டுக்குள் சிக்­காது இப்­போது ஓர­ள­வேனும் தப்பி இருக்­கின்­ற­தெனில் அதற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியே கார­ண­மாகும். நாம் அன்று சர்­வ­தேச ஒப்­பந்­தங்­களை ஏற்று ரோம்­பி­ர­க­ட­னத்தில் கைச்­சாத்­திட்­டி­ருந்தால் இன்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்டு தண்­டிக்­கப்­பட்­டி­ருப்பார். ஆயினும் நாம் அன்று எடுத்த புத்­தி­சா­லித்­த­ன­மான செயற்­பா­டுகள் இன்று அர­சாங்கம் செய்து கொண்­டி­ருக்கும் குற்­றங்­க­ளைக்­கூட காப்­பாற்­று­கின்­றது.

எனினும் இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தை அர­சாங்கம் சரி­யா­கப்­ப­யன்­ப­டுத்தி நாட்டில் ஐக்­கி­யத்­தினை ஏற்­ப­டுத்­தாது மேலும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­வது நாட்­டிற்கே பாதிப்­பாக அமையும்.

வடக்கில் இன்று இரா­ணுவ அடக்கு முறை­களை கையாண்டு சர்­வ­தேச அழுத்­தத்தை அதி­க­ரிக்கும் செயலை அர­சாங்கம் செய்து வரு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் ஏன் வடக்கில் இரா­ணுவ அதி­காரம்? வடக்­கிற்கு இன்று சிவில் நிர்­வா­கி­களே அவ­சியம். தமிழ் மக்­க­ளுக்கு சிவில் பாது­காப்­பினை வழங்க வேண்­டுமே தவிர இரா­ணுவ நிர்­வாகம் அவ­சி­ய­மில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­களை பாது­காக்­காது அவர்­களின் உரி­மை­களை பறித்து அவர்­களை பழி­வாங்­கவே இந்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. தமிழ் மக்­களின் உரி­மை­களை பறிப்­பது மீண்டும் அவர்­களை ஆயு­த­மேந்த வைக்கும் செய­லாகும். இதை அர­சாங்கம் மீண்டும் எதிர்­பார்க்­கின்­றதா? உண்­மை­யி­லேயே நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் தமிழ் மக்களை சுயமாக செயற்பட விட வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் வட மாகாண ஆளுநரின் மீள் நியமனம் தொடர்பில் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோருவது நியாயமானதாகவே உள்ளது. அரசாங்கம் இதை விளங்கிக்கொண்டு இணக்கப்பாட்டிற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :