அளுத்கமை கலவரத்தில் கொல்லப்பட்ட இருவரின் மரண சான்றிதழ் அறிக்கையில், குறித்த இருவரும் வெட்டுக்காயங்களால் மரணமானதாக களுத்துறை வைத்தியசாலைச் சேர்ந்த மருத்துவ அதிகாரியால் மரண சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது எனினும் குறித்த இறந்தவரின் குடும்பத்தினர் அவரின் உடலில் துப்பாக்கி சூட்டுகாயங்கள் இருந்ததாக தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறித்த மரண சான்றிதழில் சந்தேகம் இருப்பதாக வழக்கு பதிவு செய்திருந்த அதேவேளை வழக்கை நேற்று விசாரித்த களுத்துறை நிதிமன்ற நீதிபதி இது தொடர்பாக விசாரிக்க மரண சான்றிதல் வழங்கிய களுத்துறை வைத்தியசாலைச் சேர்ந்த மருத்துவ அதிகாரியை, இம்மாதம் 31 ஆம் திகதி களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு விசாரணையில் சாட்சிகளாக இறந்தவர்களின் மைத்துனர்கள் சாட்சியம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது .இவ்வழக்கு விசாரணை தொடர்பாக குறித்த வழக்கில் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக சட்டத்தரணி சல்மான் அவர்கள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக குறித்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி சல்மான் அவர்களையும் இவ்வழக்கு தொடர்பாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அப்பிரதேச சகோதரர் நசீல் அவர்களையும் மடவளை நியூஸ் சற்றுமுன் தொடர்பு கொண்டு இவ்விடயங்களை ஊர்ஜிதப்படுத்தியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment