மலர்ந்துள்ள இப்புனித நோன்புப்பெருநாளில் அனைவருக்கும் நல்லாசி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். நோன்பின் மூலம் பெற்ற பயிற்சிகள் எமது சமூகத்தை மிள்வாசிப்புள்ள சமூகமாக பரிணாமம் அடையச்செய்ய வழிவகுக்கவேண்டும்.
அத்தோடு காசா மண்ணின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பயங்கரவாத நடவடிக்கையினால் அநியாயமாக காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்காய் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதோடு மீண்டும் அம்மண்ணில் சத்தியமும், சமாதானமும் நிலைத்தோங்க பிரார்த்திப்பது எமது கடமைகளில் ஒன்றாகும்.
பலஸ்தினர்களுக்காய் எம்மால் பௌதிக ரீதியில் உதவ முடியாவிட்டாலும் எமது பிரார்த்தனைகள் மூலம் உதவுவோமாக. அத்தோடு இஸ்ரேலிய உற்பத்திப்பொருட்களை பகிஸ்கரிப்பதன் மூலம் எமது பாலஸ்தின அப்பாவி உயிர்களையும் , சிறார்களையும் பாதுகாக்க உதவ முடியும் என்ற செய்தியை பிராந்திய ஜம்மியத்துல் உலமாக்கள், அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுகின்றேன்.
.jpg)
0 comments :
Post a Comment