மின்­சா­ர­ச­பைக்கு ஊழி­யர்­களை இணைத்துக் கொள்­வதில் முறை­கேடு

மின்­சா­ர­ச­பைக்கு ஊழி­யர்­களை இணைத்துக் கொள்­வதில் நேர்­முகத் தேர்வு மேற்­கொள்­ளப்­ப­டாமல் முறை­கே­டான வகையில் ஊழி­யர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வதை தடுத்து உரிய முறையில் நேர்­முகத் தேர்­வு­களை நடத்தி ஊழி­யர்­களை இணைத்­துக்­கொள்­ளு­மாறு இலங்கை மின்­சார சபை யின் இணைந்த தொழிற்­சங்க முன்­ன­ணியின் செயற்­குழு உறுப்­பினர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.

அர­சியல் தலை­யீட்டின் கார­ண­மாக இல ங்கை மின்­சார சபையின் பத­வி­க­ளுக்கு ஊழி­ யர்­களை மேன் பவர் கம்­ப­னி­க­ளூ­டாக சேர்த்­துக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­யொன்று அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஒழுங்­க­மைக்­கப்­பட்ட நேர்­முகத் தேர்­வு­களின் மூல­மாக ஊழியர் தெரி­வுகள் இடம்­பெ­று­வ­தில்லை. முறை­யற்ற விதத்தில் அர­சி­யல்­வா­தி­களால் தரப்­படும் பெயர்ப்­பட்­டியல் மூலமே ஊழி­யர்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்டி னார்.

அண்­மையில் இம்­முன்­ன­ணியால் கொழு ம்பு நிப்பொன் ஹோட்­டலில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்டு இலங்கை மின்­சார சபை யில் நிலவும் பிரச்­சி­னைகள் மற்றும் நெருக்­க­டிகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தட்­டெ­ழுத்து வேலைகள், மின்­சார கோபு ரம் ஏறும் வேலைகள் போன்­ற­வற்­றுக்கு படித்­து­விட்டு வீட்­டி­லி­ருக்கும் இளை­ஞர்கள் குறித்த அர­சி­யல்­வா­தி­களால் வழங்­கப்­படும் பெயர்ப்­பட்­டியல் மூல­மாக இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். அவர்­க­ளுக்கு ஊழி யர் சேம­லாப நிதி உள்­ளிட்ட எவ்­வித உரித்­துக்­களும் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு விபத்து உள்­ளிட்ட அனர்த்­தங்கள் நேர்ந­்தாலும் காப்­பு­று­தியும் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை. எனவே தொழில் அமைச்சராக இருந்து தொழிலாளர் தொடர்பிலான ஒழு ங்குவிதிகளை கொண்டு வந்த ஒருவர் நாட்டு க்கே தலைவராகியிருக்கும், நிலையில் இவ்வாறான அடிமை செயற்பாடுகள் நடை பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :