தாக சாந்தி நிகழ்வு

த.நவோஜ்-

டந்த வருடம் 2013.07.12ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமை நிமித்தம் கொழும்புக்குச் சென்று திரும்பும் வேலையில் பொலநறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டியில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிர் நீத்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திங்கள்கிழமை தாக சாந்தி நிகழ்வு வாழைச்சேனையில் இடம் பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற தாக சாந்தி நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது வீதியால் பயணித்த அனைவருக்கும் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :