கொழும்பில் பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சியுடன் வந்த, எச்சரிக்கை கடிதம்


கொழும்பில் பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சியுடன் வந்த, எச்சரிக்கை கடிதம்
பள்ளிவாசலுக்கு பன்றி இறைச்சி அனுப்பி வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டே பகுதியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றிற்கே இவ்வாறு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்துடன் பன்றி இறைச்சி துண்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உயர் பாதுகாப்பு வலயத்தில் பள்ளி வாசல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக புனர்நிர்மானப் பணிகளை நிறுத்துமாறும் கோரி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவரினால் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், பள்ளிவாசல் நிர்வாகம் சம்பவம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :