பிலிப்பைன்ஸை தாக்கிய 'ரம்மசுன்' சூறாவளி; 13 பேர் உயிரிழப்பு



பிலிப்­பைன்ஸை புதன்­கி­ழமை தாக்­கிய ரம்­மசுன் சூறா­வ­ளியில் சிக்கிக் குறைந்­தது 13 பேர் பலி­யா­ன­துடன், பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இட­ம்பெ­யர்ந்­துள்­ள­னர்.இந்த சூறா­வ­ளியால் தலை­ந­க­ரிலும் அந்­ந­க­ருக்கு நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள மீன்­பிடிக் கிரா­மங்­க­ளி­லு­முள்ள வீடு­களின் கூரைகள் கடும் சேதத்­துக்­குள்­ளா­ன­துடன் மரங்­களும் சரிந்­து­ வி­ழுந்­துள்­ளன. 

தலை­ந­கரில் சூறா­வ­ளியால் வாக­னங்கள் பலவும் புரட்­டப்­பட்­டுள்­ளன. மேற்­படி சூறா­வளி பிர­தான தீவான லுஸனை மணிக்கு 185 கிலோ­மீற்றர் வேகத்தில் தாக்­கி­யுள்­ளது.இந்த சூறா­வ­ளி­யை­ய­டுத்து பிராந்­தி­யத்­தி­லுள்ள அர­சாங்க அலு­வ­ல­கங்­களும் பாட­சா­லை­களும் மூடப்­பட்­டுள்­ள­துடன் விமான சேவை­களும் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளன.
'கிளென்டா' என செல்­ல­மாக அழைக்­கப்­படும் இந்தச் சூறா­வளி கார­ண­மாக 370,000 பேருக்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

மேற்­படி சூறா­வளி முதன்­மு­த­லாக தாக்­கிய கிழக்கு அல்பே மாகா­ணத்­தி­லி­ருந்தே அதி­க­ள­வானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். மணிலா விரி­கு­டாவில் சேரிப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள வீடுகள் இந்த சூறா­வ­ளியால் கடும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன.பெடான்கஸ் நகரில் சூறா­வ­ளியால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு தேசிய செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :