கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவில் மீள்குடியேற விரும்புவோர் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஏற்கனவே மீள் குடியேற்றப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
இதுவரை தமது சொந்த இடங்களில் குடியேறாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் வெளி மாவட்டங்களிலும் வசிப்பவர்கள் உடனடியாக தம்மை கண்டாவளை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
0 comments :
Post a Comment