ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை அடுத்து வாரம் கூடவுள்ளது

லைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. 

இதன்போது ஊவா மாகாண சபைத் தேர்தல் குறித்தும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தற்போது முன்மொழியப்பட்டுள்ள பொது வேட்பாளர்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. 

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்களுக்கு தெளிவான கொள்கை விளக்கம் ஒன்றை முன்வைப்பது தொடர்பில் ஐதேக ஆராய்ந்து வருகிறது. 

இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

எதிர்வரும் ஆறு மாதங்களில் இந்த கொள்கை அறிக்கை தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
தெரிவித்தார்.
அத 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :