பொத்துவில் அல்-கலாம் பாடசாலையில் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் - படங்கள்

ஏ.எல்.ஜனூவர்-ஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வரும் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் 21.04.2017 (இன்று) பொத்துவில் அல்-கலாம் பாடசாலையில் பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இவ் நடமாடும் சேவை பொத்துவில் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொத்துவில் 13,14,16,17 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கு நடாத்தப்பட்டது. இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு துரைசார்ந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
;
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாசித், உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான், முன்னாள் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.ஏ.மர்ச10க், மற்றும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களும், திணைக்கள தலைவர்களும், அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :