இறக்காமத்தில் சகல வசதிகளையும் கொண்ட சந்தைத் தொகுதியை திறந்து வைப்பு - படங்கள்

 அரூஸ்- 

நேற்று இறக்காமத்தில் இடம்பெற்ற பாரிய அபிவிருத்தி பெருவிழாவின் ஒரு அங்கமாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சகலவசதிகளையும் கொண்ட சந்தைத்தொகுதியை திறந்துவைத்தார்.

இதன் போது வியாபாரிகளின் நலன்கள் மற்றும் எதிரி்நோக்கும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார். அத்தோடு மக்களோடு மக்களாக நின்று மரக்கறிவகைகளையும் கொள்வனவு செய்தது மக்களின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது.

இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் யு.கே.ஜபீர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசல் காசீம்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், நீதி அமைச்சரின் இணைப்பச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 






.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :