3வயது சிறுமியின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 2வயது சிறுவன்

மெரிக்காவின் உத்தவில் கேகி பகுதியில் ஒரு வீட்டில் 3 வயது சிறுமி ஒருத்தி தனது 2 வயது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

பக்கத்து அறையில் அவர்களது தாயார் இருந்தார். அப்போது அந்த சிறுமி வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்தாள்.

அதைப் பார்த்ததும் உடன் இருந்த அவளது தம்பி அதை பறித்தான். இதனால் அவர்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் சிறுமியின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்த குண்டு வெடித்தது.

அக்குண்டு சிறுவனின் உடலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. இதற்கிடையே துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த தாயார் குண்டடிப்பட்டு மயங்கி கிடந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவனுக்கு ஆபரேசன் நடந்தது. இருந்தும் அவன் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்த மாதத்தில் மட்டும் இது போன்று 4 சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு கேகி பகுதி ஷெரீப் மிக் பீட்டர்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :