கல்முனை மாநகர சபைக்கு கழிவகற்றி இயந்திரம் : முதல்வரிடம் அமைச்சர் அதாஉல்லா கையளிப்பு!



அஸ்லம் எஸ்.மௌலானா-

ள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால கல்முனை மாநகர சபைக்கு 35 லட்சம் ரூபா பெறுமதியான கழிவகற்றி இயந்திரத் தொகுதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரிடம் குறித்த இயந்திரத்திற்கான ஆவணங்களைக் கையளித்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்- பொறியியலாளர் எம்.நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :