சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு இத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முடியும் - நாமல்

சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு மாகாணசபை தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பவும், சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை தோற்கடிக்கவும் மாகாணசபைத் தேர்தலை மக்கள் ஓர் சர்வஜன வாக்கெடுப்பாக கருதி வாக்களிக்க வேண்டும். நாட்டை நேசிக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் நாட்டு மக்கள் 30 ஆண்டுகளாக பீதியில் வாழ்ந்து வந்தனர். பயங்கரவாதத்தை இல்லாதொழித்து சுபீட்சமான இலங்கையை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

புலி பயங்கரவாதத்தை மீள கட்டியெழுப்ப காலனித்துவ ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் ஆளும் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய அனைவரும் இணைந்து செயற்படுவோம் என நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :