அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் அருகேயுள்ள ஓசோ என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 30 வீடுகள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.
இடிபாடுகளை அகற்றிய போது 8 பிணங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில் மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பலியானவர்கள் தவிர 176 பேரை காணவில்லை. எனவே மாயமான அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது/ மோப்ப நாய்கள், சோலார் கருவிகள் மற்றும் விமானம் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

0 comments :
Post a Comment