நாரம்மல – கிரியுல்ல வீதியின் மட்டியகனே பகுதியில் இன்று காலை 6.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வபாத்தாகி உள்ளதாக தெரிய வருகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியே இவ்விபத்து நடந்துள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சவுதியில் இருந்து திரும்பும் தம்பி ஒருவரை அழைத்து வர (உக்குவல) வரக்காமுற பிரதேசத்தில் இருந்து சென்ற சகோதரர்கள் மற்றும் அவரின் நண்பருடன் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோரே வபாத்தாகி உள்ளனர்.
25 வயது மதிக்கத்தக்க பவ்சுல் அமீன், சாகிர் மற்றும் இருவரே வபாத்தானவர்கள் ஆவார். இதில் ஒருவர் அக்குரனையை பிறப்பிடமாக கொண்டவராவார்.
உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் நாரம்மல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment