எம்.ஐ.பிர்னாஸ்,எம்.ஐ.றியாஸ்,ஏ.எல்.றியாஸ்-
கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக அட்டாளைச்சேனை அந்-நுார் மகா வித்தியாலயத்தல் நவீன முறையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழாவும் தரம் ஒன்று மாணவர்களுக்கான ஏடு தொடக்க நிகழ்வும் இன்று அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு வகுப்பறைக் கட்டடத்தனை திறந்து வைத்தார்.இதன் பின்னர் கலந்து கொண்ட அதிதிகளினால் மாணவர்களுக்கு ஏடு தொடங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில்
பிரதேச சபையின் உறுப்பினரும், மாவட்ட சாரணிய உதவி ஆணையாளருமான சமூகசேவையாளர் எஸ்.எல்.முனாஸ் ,சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்எம்.எம்.அமீன்,சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் யு.எம்..நியாஸி,பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் பிரதி அதிபர்எம்.ஏ.எஅப்துல் ஹை,உதவி அதிபர் எம்.ஐ.ஹாசீம் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களான பீ.ஆரீபின்,ஏ.எல்.றியாஸ்,ஏ.பி.அன்வர்,எம்.ஏ.சம்சுத்தீன் உட்பட பிரமுகர்கள் பெற்றோர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் சேவையினை பாராட்டி அந் நுார் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
பெற்றோர்களின் பங்களிப்புடன் இக் கட்டடம் நவீன படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

.jpg)






0 comments :
Post a Comment