எம்.பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக ஐ.எல்.எம்.றிஸான் மற்றும் பொருளாளராக பி.எம்.ஏ.காதரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு போட்டியின்றியே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் பொருளாளர் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்டனர்.
முன்னாள் பொருளாளர் மப்றூக் 09 வாக்குகளையே பெற்றார்.. இவருடன் போட்டியிட்ட எம்.சஹாப்தீன் 17 வாக்குகளையும், பி.எம்.ஏ.காதர் 22 வாக்குகளையும் பெற்றனர்.
இதனடிப்படையில் பி.எம்.ஏ.காதர் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார்.
புதிய நிர்வாகிகள் முழு விபரம்:
தலைவர் - மீரா எஸ்.இஸ்ஸடீன்
உப தலைவர்கள் - எஸ்.கிருஸ்கந்தராஜா, லியார் முஸம்மில்
செயலாளர் – ஐ.எல்.எம்.றிஸான்
உப செயலாளர்கள்- ஆர்.தில்லைநாதன், ஜெஸ்மி எம். மூஸா
பொருளாளர்- பி.எம்.ஏ.காதர்
கணக்காய்வாளர்- எம்.ஐ.ஆரிப்
நிர்வாக சபை உறுப்பினர்கள் - எம்.எல்.ஜமால்டீன், யூ.எம்.இஷ்ஹாக், ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஏ.புவாத், எஸ்.எல்.நிஷார், எஸ்.நாகராஜா, எம்.ஐ.சம்சுதீன், எம்.ஐ. றியாஸ்.
ஆலோசனை சபை உறுப்பினர்கள் - எம்.ஐ.எம்.வலீத், யூ.கே.சம்சுதீன், ஏ.எல்.எம்.சலீம், எம்.ஐ.சரிப்தீன், சுல்பிகா ஷெரீப், எம்.சஹாப்தீன், எம்.ஏ. பகுர்தீன், ரி.கே. றஹ்மத்துல்லா, ஐ.ஏ.சிராஜ் ஆகியோர்.
இங்கு தலைவர் மிரா இஸ்ஸதீன் உரையாற்றும் போது, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளது. எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் முன்னேற்றத்திற்காக பல வேலைத்திட்டங்களை முன்னடுக்கவுள்ளோம். ஊடகவியலாளர் மப்றூக்கிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஐம்பதாயிரம் ரூபாய்களை நமது சம்மேளனத்தின் ஊடாக வழங்கியதற்கு ஹரீசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அது மட்டுமல்ல ஊடகவியலாளர்கள் கஸ்டப்படுகின்றபோது உதவி புரிகின்ற அரசியல் வாதிகளை அடுத்த கனம் மறந்து அவர்களை தூசிப்பது நல்லதல்ல என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment