
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்றுஇடம்பெற்ற இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணியை 12ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தென்னாபிரிக்கா சாரபில் ஜேபி.டுமினி 51 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சேனாநாயக்க 3 விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் லசித் மாலிங்க ருவென்டி ருவென்டி போட்டிகளில் இன்று தனது 50வது விக்கெட்டினை வீழ்த்தினார்.
பதிலுக்கு 116 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஒட்டங்களை மாத்திரமே பெற்று 12ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எவரும் கைகொடுக்காத நிலையில் குமார் சங்கக்கார மாத்திரம் இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 59ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்கா சார்பில் அரைசதம் கடந்த டுமினி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ருவென்டி ருவென்டி தொடரில் தென்னாபிரிக்கா ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
0 comments :
Post a Comment