றிஸானா நபீக்­கி­னு­டைய பெற்­றோருக்கு தொலைபேசி மிரட்டல்


வுதி அரே­பி­யாவில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட மூதூர்- சாபி நகரைச் சேர்ந்த றிஸானா நபீக்­கி­னு­டைய பெற்­றோர், தமக்­கு ஒரு சில வாரங்­க­ளாக அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் கிடைக்கப் பெறும் தொலை­பேசி அழைப்­புக்கள் தமது மனதை புண்­ப­டுத்தும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

இது குறித்து றிஸா­னாவின் தாய் றுபினா தெரி­வித்­துள்­ள­தா­வது: -நான் இன்னும் எனது மகள் றிஸா­னாவின் கவ­லை­யி­லி­ருந்து மீள­வில்லை. இந்த நேரத்தில் எனக்கு இனந் தெரி­யாத சில தொலை­பேசி இலக்­கங்­க­ளி­லி­ருந்து உங்­க­ளுக்கு எத்­தனை வீடு கட்டி தந்­தி­ருக்­கின்­றார்கள்? எத்­தனை கோடி ரூபாக்கள் உங்­க­ளது வங்கி கணக்கிள் வைப்பில் இடப்­பட்­டுள்­ளன என்­றெல்லாம் கேட்­கப்­ப­டு­கி­ற­து.

தொலை­பேசி அழைப்­புக்கள் வந்து என்­னையும் எனது கண­வ­ரையும் மேலும் கவ­லை­ய­டையச் செய்யும் வண்ணம் உள்­ளது.

எமது நாட்டு அர­சி­யல்­வா­தி­களும், தன­வந்­தர்­களும்,பொது­மக்­களும் இன மத பேதங்­க­ளுக்கு அப்பால் உதவி செய்­தி­ருக்­கின்­றார்கள். அத்­தோடு இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் வீடொன்று அமைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. அதனை நானும் ஏற்றுக் கொள்­கின்றேன். ஆனால் மற்­றை­ய­வர்கள் நினைப்­பது போன்று இறை­வன்­மீது ஆணை­யாக கோடி கணக்­கான ரூபாக்கள் எமக்கு வர­வில்லை.

என­வே தான் எனது மகளை நினைத்து இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது குடும்பத்தை மேலும் கவலையடையச் செய்ய வேண்டாமென உரையாடிய போது கவலையோடு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :