சுடர்ஒளி பிரதம ஆசிரியர் தமிழ் விவகாரங்கள், தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராக ஜனாதிபதியினால் நியமணம்

-எம்.பைஷல் இஸ்மாயில்-
சுடர்ஒளி பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜா தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக 1996ஆம் ஆண்டு தனது ஊடகப்பணியை ஆரம்பித்த சிவராஜா, மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனம் என்பனவற்றில் அரசியல் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.

அதன் பின்னர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக இதுவரை கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான சிவராஜா, இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

களுத்துறை இங்கிரியவையை பிறப்பிடமாக கொண்ட இவர் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :