முதல்வர் சிராஸ் மீராசாஹிப்பும் கொரிய கிறிஸ் அமைப்பின் பணிப்பாளர் ஜின்ஜோல் லும் சந்திப்பு

(அகமட் எஸ். முகைடீன்)
ல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், இலங்கைக்கு விஜயம் செயதுள்ள கொரிய அரசாங்கத்தின் பௌதீக திட்டமிடலுக்கான பிரதான ஆய்வு நிறுவனமான கிறிஸ் அமைப்பின் பணிப்பாளர் ஜின்ஜோல்-ஜுலுடன் இன்று (26.08.2013) காலை முதல்வர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

ஆசிய மன்றத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி,பொறியியலாளர் ஹலீம் ஜெளசி,ஆசிய மன்றத்தின் ஆசிய அபிவிருத்தி அதிகாரி செல்வி யங்கிம்,ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரன்இ நிகழ்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் மாநகரின் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கல்முனை மாநகரினை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியப்பாடு எமக்கு கிடைக்குமானால் உதவிகளை புரிவதாக கிறிஸ் அமைப்பின் பணிப்பாளர் ஜின்ஜோல்-ஜுல் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :