வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளில் தேர்தலில் ஐ. தே. க. ஒரு தேர்தல் தொகுதியில் கூட வெற்றிபெறாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முடிந்தால் ஒரு தொகுதியையாவது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுக் காட்டட்டும் என்றும் அமைச்சர் சவால் விடுத்தார்.
தங்க இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“நடைபெறவிருக்கும் 3 மாகாண சபைகளிலும் ஆளும் ஐ. ம. சு. மு. கட்சிக்கு மக்களின் பூரண ஆதரவு கிடைக்கும். ஆளும் கட்சி மீது மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை இந்நாட்டு மக்களும், சர்வதேசமும் அறிந்துகொள்ளும்.
ஐ. தே. க. வின் உறுப்பினர்கள் பலர் ஆளும் தரப்புடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளனர். ஐ. தே. க. மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் தொகுதியைக் கூட ஐ. தே. க.வால் வெற்றிகொள்ள முடியாது” என்றும் கூறினார்.
முடிந்தால் ஒரு தொகுதியையாவது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுக் காட்டட்டும் என்றும் அமைச்சர் சவால் விடுத்தார்.
தங்க இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“நடைபெறவிருக்கும் 3 மாகாண சபைகளிலும் ஆளும் ஐ. ம. சு. மு. கட்சிக்கு மக்களின் பூரண ஆதரவு கிடைக்கும். ஆளும் கட்சி மீது மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை இந்நாட்டு மக்களும், சர்வதேசமும் அறிந்துகொள்ளும்.
ஐ. தே. க. வின் உறுப்பினர்கள் பலர் ஆளும் தரப்புடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளனர். ஐ. தே. க. மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் தொகுதியைக் கூட ஐ. தே. க.வால் வெற்றிகொள்ள முடியாது” என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment