கிராண்பாஸ் பிரதேசத்தின் முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நாங்கள் அல்ல-BBS

கிராண்பாஸ் பிரதேசத்தின் சுவர்ண சயித்ய வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கும் தமது அமைப்பிற்கு எவ்வித தொடர்பும் இல்லையென பொதுபல சேனா, ராவன பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொடஅத்தே ஞானசார தேரர், தாம் உட்பட பலர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அத்துடன் எமது அமைப்பிற்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

'சிங்கள ராவய" தேசிய அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய மெடில்லே ஞானலோக்க தேரர் கூறுகையில், தாங்கள் இந்து, முஸ்லிம் ஜனங்களுடன் தமக்கு நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் நேற்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

'ராவன பலய" அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறுகையில், தமது அமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டில்லை எனவும் தமது அமைப்பு ஒருபோதும் பிற மத மக்களை துன்புறுத்தியதில்லையெனவும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :