இந்த நாடு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கே உரியது - சோமவன்ச

ந்த நாடு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கே உரியது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
இன்று (29) காலை வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சி மற்றும் வேறு எந்த இளைஞர் சங்கத்தினாலும் செய்ய முடியாத விடயங்களை தமது கட்சியினர் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் சங்கத்தினர் வவுனியாவிற்குச் சென்று இளைஞர்களிடம் சமாதானத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டார்.

ஆறு வருட காலத்திற்குள் இரண்டாவது தடவையாக தமது கட்சி வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் நகரமாக வவுனியா குறிக்கப்படுவதாகவும் நாடு முழுவதிலும் சகல மக்களிடையும் ஒற்றுமையான வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் சோமவன்ச அமரசிங்க இதன்போது தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :