கருப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழம் வீசியதால் பெரும் சர்ச்சை.

த்தாலியில் கருப்பின பெண் அமைச்சரான சிசில் கியேங்கே மீது வாழைப்பழம் வீசப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

காங்கோவில் பிறந்தவர் சிசில் கியேங்கே. இத்தாலியில் குடியேற்றத் துறை அமைச்சராக உள்ளார். 

நேற்று நடந்த ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் சிசில் மீது வாழைப்பழத்தை தூக்கி எறிந்தார்.

வாழைப்பழம் சிசில் மீது படவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு இத்தாலி முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முன்னதாக நார்தர்ன் லீக் கட்சி தலைவர் ராபர்ட் கால்டிரோலி சிசிலை பார்த்தால் அவர் ஒராங்குட்டான் போன்று இருப்பதாக தனக்கு தோன்றுகிறது என்று தெரிவித்தார்.

இது குறித்து சிசில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் வாழைப்பழ வீச்சை உணவுப் பொருள் வீணடிப்பு என்று தெரிவித்துள்ளார் சிசில்.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் சிசிலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதோடு, வாழைப்பழ வீச்சுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :