தறாவீஹ் தொழுகை நடாத்துவதற்கு காத்தான்குடியிலிருந்து ஹாபீழ்கள் மாலைதீவு பயணம்

 காத்தான்குடியிலிருந்து ஆறு ஹாபீழ்கள் இன்று பிற்பகல் மாலைதீவு பயணமாகின்றனர்.

மாலைதீவில் புனித ரமழான் மாதத்தில் புனித தறாவீஹ் தொழுகையை நடாத்துவதற்காகவே இவர்கள் மாலைதீவு பயணமாகியுள்ளனர்.

காத்தான்குடி ஹுதா வீதியில் வசிக்கும் மௌலவி அல் ஹாபிழ் ஏ.எல்.எம்.நிப்றாஸ் (பலாஹி) தலைமையில் இவர்கள் மாலைதீவு பயணமாகியுள்ளனர்.

மாலைதீவு தத்தே மாநகர மேயர் முகம்மட் றிசானின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் மாலைதீவு பயணமாகியுள்ளனர்.

இவர்களில் காத்தான்குடி, பாலமுனை, காங்கேயனோடை மற்றும் றெதிதென்ன ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்களான இவர்கள் மாலைதீவில் ஒருமாத காலம் தங்கியிருந்து தறாவீஹ் தொழுகையை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :