நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுடன் லொறி மோதியதில் பெண் உயிரிழப்பு.

ஜா-எல, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று (01) அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ் விபத்தின் போது 2 மற்றும் 5 வயதான சிறுவர்கள் இருவர் வாகன சாரதி மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவத்தில் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் கணவன் மற்றும் அவரது பிள்ளைகள் இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :