
ஹங்குரன்கெத்த தாராஓயாவில் மிதந்த நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சடலங்கள் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஹேவாஹெட்ட பகுதியைச் சேர்ந்த இரண்டு தோட்டத் தொழிலாளர் பெண்களே உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சென்றிருந்ததாகவும் தாரா ஓயாவை கடப்பதற்கு முற்பட்டபோது கால் இடறி ஆற்றில் வீழ்ந்திருப்பதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சடலங்கள் முல்லோயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.
0 comments :
Post a Comment