நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளரை தாக்கியதாகக் கூறப்படும் சட்டபீட மாணவனின் இரத்த மாதிரி, கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் லயனல் மொஹாந்திரம் தெரிவித்தார்.
வைத்தியருமான மேற்படி மாணவன், குடித்ததாகக் கூறப்படும் விஷம் யாதென கண்டுபிடிப்பதற்காகவே அம்மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படி மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் இன்னமும் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
விளக்கமறியல் கைதியான அம்மாணவன் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விரிவுரையாளர் மீது அம்மாணவன் தாக்குதல் நடத்துவதை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் மூவரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மும்முரமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியருமான மேற்படி மாணவன், குடித்ததாகக் கூறப்படும் விஷம் யாதென கண்டுபிடிப்பதற்காகவே அம்மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படி மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் இன்னமும் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
விளக்கமறியல் கைதியான அம்மாணவன் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விரிவுரையாளர் மீது அம்மாணவன் தாக்குதல் நடத்துவதை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் மூவரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மும்முரமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment