(எம்.பைஷல் இஸ்மாயில்)கல்முனைப் பிராந்திய பிரதான தபாலகத்திற்குட்பட்ட உப தபால் அலுவலகங்களில் தந்திச்சேவையில் உள்ள இழுபறியினால் பொதுமக்கள் பல சிரமங்கள எதிர்நோக்கி வருகின்றனர்.
கல்முனை தபாலக பிராந்தியத்திலுள்ள உப தபால் அலுவலகங்களில் தந்திச் சேவையைப் பெறுவதற்காக பொதுமக்கள் செல்லும்போது அதற்கான விண்ணப்பங்கள் பிரதான தபால் அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெறவில்லை எனவும் இதனால் இச்சேவையை மேற்கொள்ள முடியாது எனவும் உப தபாலக அதிபர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலைமை சுமார் இரண்டு வாரங்களாக இவ்வாறான சேவைகள் உப தபாலகங்களில் இடம்பெறவில்லை மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்களின் அவசியத் தேவைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட உயரதிகாரிகள் பொதுமக்களின் இந்த கோரிக்கை
யை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 comments :
Post a Comment