
சிறுமி ஒருவரை பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துக்கப்பட்டுள்ளதாக புத்தளம், பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பல்லம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதுடைவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி 17 வயதுடைய சிறுவன் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி தனியார் வகுப்பிற்குச் செல்வதாக வீட்டாரிடம் கூறிவிட்டு சென்ற சிறுமி, தொலைபேசியில் தனது காதலனை பாடசாலைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் தனது காதலனை சந்தித்ததாகவும் அதன்போது காதலன் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment