இறக்காமம் பிரதேசத்தில் மாபெரும் குடும்ப இஜ்திமா.


ஏ.எச்.எம் இம்தியாஸ் இறக்காமம்.

றக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் 2013.06.02ம் திகதி அஸர் தொழுகை முதல் இஷா வரை மாபெரும் குடும்ப இஜ்திமா நடைபெற்றது. 

அஷ்ஷெய்க் ஐ.றஷீன் (அன்வாரி) அவர்களின் தலைமையில் 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் கருப் பொருளில் இடம் பெற்ற இந் நிகழ்வில் 'இணக்காமான வாழ்வு இனிய சுவனம்' எனும் தலைப்பில் தேசிய ஒருங்கிணைப்புப் பகுதி – பகுதி பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.உவைஸ் (இஸ்லாஹியா) அவர்களினால் உரையாற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து 'மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்' எனும் தலைப்பில்; நீதிக்கும் சமாதானத்திற்க்குமான முன்னனிப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.நஜா முஹம்மத் (இஸ்லாஹியா) அவர்களினால் உரையாற்றப்பட்டது. 

இறுதியாக 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் கருப் பொருளில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் (அமீர், இலங்கை ஜமாஆத்தே இஸ்லாமி) அவர்களினால் உரையாற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் ஆலிதீன் நியாஸ் (இஸ்லாஹியா, பொறுப்பாளர் இலங்கை ஜமாஆத்தே இஸ்லாமி இறக்காமம் மன்றம்) அவர்களின் நன்றியுரையுடன் இன்றய மாபெரும் குடும்ப இஜ்திமா இனிதே நிறைவு பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :