கொழும்பு, கோட்டை லேக்ஹவுஸ் கட்டிடத்திற்கு பின்னால் உள்ள ரயில் பாதையில் குழந்தை ஒன்றை பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளனர். 5 மாத பெண் குழந்தை ஒன்றே இவ்வாறு அநாதரவான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்போது குழந்தை பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment