.jpg)
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என யாழ். அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற தனது மகன் காணாமற்போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் நேற்று (23) அச்சுவெலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேந்த கவிதாசன் ரிசாந்தன் (15 வயது) என்ற சிறுவனே இவ்வாறு காணாமற் போயுள்ளார்.
இவரது நண்பர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாதுள்ளதாக தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இம்மாணவன் கடந்த 19ஆம் திகதியிலிருந்து காணாமற் போயுள்ளதாக அவரது தாயார் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment